search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரவேற்பு நிகழ்ச்சி"

    • திருவாதவூர் சிபெட் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
    • இந்த நிகழ்ச்சியில் மதுரைவெங்கடேசன் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூரில் மத்திய அரசின் சிபெட் கல்லூரி உள்ளது.

    இங்கு 2022-23 ம் ஆண்டுக்கான புதிய மாணவ-மாணவிகளை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் மதுரைவெங்கடேசன் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இதில் மேலூர் நகராட்சி தலைவர் முகமது யாசின், திருவாதவூர் ஊராட்சி மன்ற தலைவர், இளவரசன், சிபெட் கல்லூரி இயக்குநர் மற்றும் தலைவர், டாக்டர் பிரகலாதன், மூத்த சிபெட் அதிகாரிகள், அலுவலர்கள்், அனைத்து மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    கல்லூரியில் நன்கு படித்து முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகளை வெங்கடேசன் எம்.பி. வழங்கினார்.

    அவர் மாணவர்க ளிடையே பேசும்போது, தொழில் கல்வியின் முக்கியத்துவத்தையும், சிபெட் கல்லூரியின் வளர்ச்சி மற்றும் மாணவர்க ளுக்கான பங்களிப்பு, அவர்களுக்கான வேலைவாய்ப்பு, திறன் மேம்பட சிபெட் கல்லூரி உதவுகிறது என்று தெரிவித்தார்.

    ×